தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து அம்மன் அருளை பெற்று செல்கின்றனர். அமாவாசை தினங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்வார்கள்.
Advertisement

இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் ஆதிசக்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அதிகாலை முதல் காட்சி அளித்தார்.

இதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மனை பம்பை மேளதாளம் முழங்க பூசாரிகள் தோளில் சுமந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. இருந்தபோதிலும் அதனை பொருட்படுத்தாத பக்தர்கள் குடைபிடித்தபடியே ஊஞ்சலில் அருள்பாலித்த அம்மனை தரிசித்தனர். மழை காரணமாக ஊஞ்சல் சேவை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மன் கோயில் உட்பிரகாரத்திற்கு பூசாரிகள் அழைத்து சென்றனர். பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் மழையில் நனைந்தபடியே ஊஞ்சல் மண்டபம் எதிரே காத்திருந்து அம்மனை மனம் உருகி வேண்டினர்.

நேற்று இரவு மேல்மலையனூர் பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக ஊஞ்சல் உற்சவம் முடிந்து வெளியே வந்த பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்த முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் கோயிலுக்கு செல்லும் முக்கிய பாதையில் மக்கள் கூட்டதில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

Related News