தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆதார், பான்கார்டை பயன்படுத்தி பெண் பெயரில் போலி ஏற்றுமதி நிறுவனம்

வேலூர்: ஆதார், பான்கார்டை தவறாக பயன்படுத்தி ஆரணியில் ஏற்றுமதி நிறுவனம் பெயரில் ரூ.1.50 கோடி நிலுவை ஜிஎஸ்டி தொகை கட்ட கோரி சம்மன் அனுப்பியது தொடர்பாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் மனு அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. இதில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 30வயது இளம்பெண் கொடுத்த மனுவில்

Advertisement

கூறியிருப்பதாவது: சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து, ரூ.1.50 கோடி ஜிஎஸ்டி தொகை செலுத்த வேண்டும் என சம்மன் வந்தது. உடனே சென்னைக்கு சென்று ஜிஎஸ்டி அலுவலத்தில் கேட்டபோது, எனது ஆதார் அட்ைட, பான்கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எனது பெயரில் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருவதும், ரூ.1.50 கோடி ஜிஎஸ்டி தொகை நிலுவையில் இருப்பதாகவும், அந்த தொகையை உடனே செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். எனக்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது அடையாள அட்டைகளை பயன்படுத்தி எனக்கு தெரியாமல் யாரோ நிறுவனம் தொடங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement