தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரு நாள் ஹெச்.எம் ஆன மாணவி

Advertisement

புதுக்கோட்டை: அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியையாக 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பொறுப்பேற்று செயல்பட்டார். அதன் விவரம் வருமாறு: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இவர்களிடம் தலைமை பண்பை உருவாக்கும் வகையில் சிறந்த மாணவி ஒருவரை தேர்ந்தெடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஒருநாள் பணியமர்த்த ஆசிரியர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி இதே பள்ளியில் 6ம் வகுப்பு முதல் படிப்பு மற்றும் தனித்திறமையில் சிறந்து விளங்கும், 11ம் வகுப்பு உயிரியியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் படிக்கும் மெய்வர்சிதா என்ற மாணவி தலைமை ஆசிரியையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், நேற்றுமுன்தினம் பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். மேலும் ஆசிரியர், ஆசிரியைகள், சக மாணவிகள் அவரை பாராட்டினர். தலைமை ஆசிரியை இருக்கையில் அமர்ந்த மாணவி மெய்வர்சிதா, ஆசிரியர்கள், மாணவிகள் வருகைப்பதிவேடு மற்றும் தலைமை ஆசிரியை மேற்கொள்ளும் அன்றாட பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவிகளையும், ஆசிரியர்களையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார்.

Advertisement