தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

சாயல்குடி: பேரையூரில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கோவிலாங்குளம், பேரையூர் உள்ளிட்ட இடங்களில் வனப்பகுதியில் புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அவ்வப்போது கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. சாலையோரம் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் இருந்து கசியும் நீரை குடித்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று பேரையூரில் விவசாய நிலப்பகுதியில் புள்ளிமான் சுற்றித்திரிந்தது. அந்த மான் திடீரென அப்பகுதியிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தது.

Advertisement

இதை பார்த்த விவசாயிகள் முதுகுளத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி, நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த மானை உயிருடன் மீட்டனர். இது, 5 வயது பெண் மான் எனவும், தற்போது சினையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த மானை சாயல்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவரால் முதலுதவி சிகிச்சை, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மான் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.

Advertisement

Related News