தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலாப்பழத்தை ருசிக்க குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை முகாம்: மக்கள் அச்சம்

Advertisement

குன்னூர்: குன்னூர் அருகே பலாப்பழத்தை ருசிக்க குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. குறிப்பாக குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள தனியார் தோட்டங்களிலும், அரசு தோட்டக்கலை பண்னை தோட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ள பலா மரங்களில் பலாப்பழம் காய்த்துள்ளன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் குன்னூரை நோக்கி படையெடுத்து வருகின்றன. மேலும் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனிதனி குழுக்களாக பிரிந்து மலைப்பாதையில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கே.என்.ஆர் குடியிருப்பு பகுதி மரத்தில் உள்ள பலாப்பழங்களை ருசிக்க ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனசரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் காட்டுயானையை சாலைக்கு வராமல், அந்த குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், காட்டு யானையை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள கடைகளில் பலா பழங்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement