தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்மேற்கு பருவமழையால் நீர் நிரம்பி காணப்படும் ஆழியார், பரம்பிக்குளம் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

Advertisement

பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழையால், ஆழியார், பரம்பிக்குளம் அணைகளில் தொடர்ந்து நீர் நிரம்பி உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை பல நாட்கள் பெய்தது. இதனால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட சோலையார் மற்றும் ஆழியார், அணைகள் அடுத்தடுத்து விரைந்து முழு அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் அவ்வப்போது வெளியேற்றப்பட்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை சற்று குறைந்து உள்ளது. இருந்தாலும், அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. இதில், மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 118.40 அடியாக உள்ளது.

அப்பர் ஆழியார் அணையிலிருந்தும் தண்ணீர் திறப்பால், ஆழியார் அணைக்கு வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், டாப்சிலிப்பை அடுத்து மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 68 அடியாக உள்ளது. வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து முழு நீர்மட்டத்தை எட்டியவாறு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Related News