தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராசிபுரம் அம்மன் கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் 230 கிடாக்கள் வெட்டி கறிவிருந்து: விடிய விடிய நடந்தது

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பொங்கலாயி அம்மன் கோயிலில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா நடந்தது. இதில் நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட 230 கிடாக்களை பலியிட்டு கறி விருந்து வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பட்டி கிராமத்தில் மிகவும் சக்திவாய்ந்த மலையாள தெய்வம் பொங்கலாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் போதமலையை சேர்ந்த மலையாள பூசாரி நள்ளிரவில் சுவாமிக்கு பூஜை, அபிஷேகம் செய்தார். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டனர்.

முன்னதாக பொங்கலாயி அம்மனுக்கு பெண் ஆட்டினை பலியிட்டு படையல் செய்த பின்பு, கிடாக்கள் வெட்டி சமபந்தி விருந்தினை ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் ஆண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மட்டுமே பங்கேற்றனர். பூஜைகள் முடிந்த பின்னர் ஆண்கள் மட்டும் நீண்ட வரிசையில் நின்று சமபந்தி கிடா விருந்து சாப்பிட்டனர். இந்த விழாவில் சென்னை, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த விருந்து விடிய விடிய நடந்தது. இன்று மதியம் வரை விருந்து நடைபெற்றது.

மொத்தம் 230கிடாக்களை வெட்டி விருந்து பரிமாறப்பட்டது. வேண்டுதலுக்காக வாங்கி கொடுக்கப்படும், கிடாக்கள் கோயில் வளாகத்திலேயே சாமிக்கு பலி கொடுக்கப்பட்டு, அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்குவதும், இதனை ஆண்கள் மட்டுமே சாப்பிடுவதும் 100 ஆண்டுகள் மேலாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.