தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரையிலும் ஒரு ரிதன்யா: வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை; கூடுதலாக 150 பவுன் கேட்டதாக பெற்றோர் புகார்

மதுரை: திருப்பூர் ரிதன்யா சம்பவம் போல், வரதட்சணை கொடுமையால் மதுரையில் இளம்பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் - தனபாக்கியம் தம்பதியின் மகன் ரூபன்ராஜ் (30). இவருக்கும், உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி - செல்வி மகள் பிரியதர்ஷினிக்கும் (28) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுமையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அடிக்கடி குடும்ப பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரூபன்ராஜ் மீது பிரியதர்ஷினி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில் ரூபன்ராஜூக்கு வேறு திருமணம் செய்து வைக்க போவதாக தகவல் கிடைத்தது. இதையறிந்த பிரியதர்ஷினி, கணவரை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை சந்தித்து பேச அவர்களது வீட்டிற்கு சில தினங்களுக்கு முன் சென்றார். இதற்கு கணவர் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி, அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அங்கேயே தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த கணவர் குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி உயிரிழந்தார்.

இதுகுறித்து பிரியதர்ஷினியின் பெற்றோர், வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக செல்லூர் போலீசில் நேற்று புகார் கொடுத்தனர். போலீசார் கணவர், மாமனார், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரியதர்ஷினியின் பெற்றோர் கூறுகையில், ‘‘திருமணமான புதிதில் 300 பவுன் நகை வரதட்சணையாக மணமகன் வீட்டார் கேட்டனர். அப்போது 150 பவுன் நகைகள் போட்டு வெகு சிறப்பாக திருமணத்தை நடத்தினோம். மேலும் 150 பவுன் கேட்டு கொடுமையால் அநியாயமாக எங்களது மகளை பறிகொடுத்து நிற்கிறோம். மருமகன் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும்’’ என்றனர். இதனிடையே பிரியதர்ஷியின் உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று கூடினர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை பெறுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

வரதட்சணை கொடுமை காரணமாக திருப்பூரில் ரிதன்யா என்ற பெண் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டிஓ விசாரணை

செல்லூர் போலீசார் கூறுகையில், ‘‘கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமை புகார் குறித்து சட்டப்படி ஆர்டிஓ தான் விசாரணை நடத்த வேண்டும். அவர் விசாரணை நடத்துவார்’’ என தெரிவித்தனர்.

Advertisement