தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் பள்ளியில் நடந்த சோகம்: 9 வயது மாணவி மாரடைப்பால் மரணம்

Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 9 வயது மாணவி மாரடைப்பால் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் சிக்கரின் டான்டா நகரில் பிராச்சி குமாவத் என்ற 9 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போலவே நேற்று முன்தினம் தேதி பள்ளிக்கு சென்றார். காலை முதல் ஆரோக்கியமாக இருந்தார். மதிய உணவு இடைவேளையின்போது உணவருந்த அமர்ந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர். உடனே அவர்கள் அலறியடித்து ஓடி வந்து மாணவியை அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை. இறந்து விட்டார். பரிசோதனையின்போது அவருக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் சுபாஷ் வர்மா, ‘ஒரு நோயாளியை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில், இது பிறவி இதய நோயாகக்கூட இருக்கலாம். பெற்றோர்கள் அதை கவனிக்காமல் இருக்கலாம். அதுபற்றி விசாரிக்க வேண்டும்’ என்றார்.

Advertisement

Related News