தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவு அதிகரிப்பால் ஆஸ்துமா உட்பட 8 மருந்துகளின் விலை 50% அதிரடி உயர்வு: தேசிய மருந்து விலை கட்டுப்பாடு மையம் தகவல்

டெல்லி: தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் அமைப்பானது, மருந்து நிறுவனங்களின் மருந்து விற்பனை விலை நிர்ணயம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கிறது. இந்நிலையில் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், ஆஸ்துமா, தலசீமியா, காசநோய், மனநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் எட்டு மருந்துகளின் உச்சவரம்பு விலையை 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. கடந்த 8ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், எட்டு மருந்துகளின் பதினொரு ஃபார்முலேஷன்களின் உச்சவரம்பு விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, அந்நிய செலாவணி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பென்சிலின், கார்டியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அட்ரோபின் ஊசி, காசநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரெப்டோமைசின் பவுடர், ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சல்பூட்டமால் மாத்திரைகள், கிளவுகோமா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பைலோகார்பைன் சொட்டு மருந்து,

பாக்டீரியா தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் செஃபாட்ராக்சில், ரத்த சோகை மற்றும் தலசீமியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டெஸ்ஃபெராக்சமைன், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் லித்தியம் மாத்திரைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் விலையை 50 சதவீதம் அளவிற்கு உயர்த்தி உள்ளதால், சமானிய நோயாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News