தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

86 மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வைப்புநிதி பத்திரங்கள்

*கலெக்டர் வழங்கினார்

Advertisement

தர்மபுரி : தர்மபுரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 86 மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டு வைப்புநிதி பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில், பொதுமக்களுக்கான வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன் அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 502 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, அரசின் விதிகளுக்கு உட்பட்டு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமான விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற்ற 86 மாணவ, மாணவிகளுக்கு ‘விபத்துக் காப்பீட்டு வைப்புநிதி’ பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.

அதேபோல, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பங்கேற்று பல்வேறு போட்டிகளில் 1 தங்கம், 6 வெண்கலப் பதக்கங்களை பெற்ற வீரர், வீராங்கனைகள் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும், கடந்த 23ம் தேதி அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 3 மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் 6 பேருக்கு கலெக்டர் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தனித்துணை கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், உதவி ஆணையர்(கலால்) நர்மதா, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News