தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

11,824 விவசாயிகளிடமிருந்து 85,287.160 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

*அரசு முதன்மை செயலர் தகவல்

Advertisement

வடலூர் : உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் சத்திய பிரதாசாகு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட குண்டியமல்லூர் மற்றும் ஐயந்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அரசு முதன்மை செயலாளர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடப்பு குறுவை பருவத்தில் 200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 11,824 விவசாயிகளிடமிருந்து 85,287.160 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யும்போது நெல்லுக்கு அரசு நிர்ணயித்துள்ள அளவின்படி ஈரப்பதம் குறித்து கணக்கீடு செய்யவும், பதிவு மற்றும் கொள்முதல் குறித்து வெளிப்படை தன்மையுடன் எவ்வித பாகுபாடின்றி பதிவேடுகளை பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள் கடலூர் கமலம், திண்டுக்கல் சிற்றரசு, கரூர் மோகன், தேனி பாலமுருகன், துணை மேலாளர் விஸ்வநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement

Related News