தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.66 கோடி மதிப்பில் 850 டீசல் பேருந்துகள் சிஎன்ஜியாக மாற்றம்: தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் 850 டீசல் பேருந்துகள் ரூ.66 கோடி மதிப்பில் சி.என்.ஜி பேருந்துகளாக மாற்றப்படுகிறது. இதற்கான ஒப்பந்த ஆணையை தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவை குறைக்கும் வகையில், டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாயிலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை தரப்பில் திட்டமிடப்பட்டன. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 3 பேருந்துகள் மட்டும் சோதனை ஓட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு சி.என்.ஜி பொருத்தப்பட்டு இயக்கப்பட்டன. இதனால், போக்குவரத்து கழகங்களின் செலவுகள் சற்று குறைந்தன.

Advertisement

இதையடுத்து, இந்த வகையான பேருந்துகளை அதிகரிக்க அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக 850 டீசல் பேருந்துகளை சி.என்.ஜி ஆக மாற்ற இகோ பியூல் சிஸ்டம் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்த ஆணையை வழங்கி உள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்த திட்டமானது 850 பேருந்துகளில் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். குறிப்பாக, இதன் மூலம் மாநிலத்தின் பசுமை போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, கார்பன் உமிழ்வை குறைக்க உதவும்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்,‘அரசு போக்குவரத்து கழகங்களை பொறுத்தவரை சிஎன்ஜி, மின்சார பேருந்துகள் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை பயணிகளின் நலன் கருதி எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பேருந்துகளில் சிஎன்ஜி பொருத்தும் முடிவு எடுக்கப்பட்டு தற்போது 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுவிட்டன. இதனால், கிலோ மீட்டருக்கு ரூ.3.94 சேமிக்கப்பட்டுகின்றன. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தற்போது ரூ.66 கோடி மதிப்பீட்டில் இகோ பியூல் சிஸ்டம் இந்தியா லிமிடேட் நிறுவனத்துடன் 850 டீசல் பேருந்துகளை சி.என்.ஜி ஆக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை அளித்துள்ளோம். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சி.என்.ஜிக்களாக மாற வாய்ப்புகள் உள்ளன,’ என்றார்.

Advertisement