தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதானவர்களால் ஏற்படுகிறது: டிரம்பை கலாய்த்த ஒபாமா

லண்டன்: ‘உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதானவர்கள் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஏற்படுகிறது’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறியிருப்பது பரபரப்பாகி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அதிபராக இருந்த பாரக் ஒபாமா (67), இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அளித்த பேட்டி ஒன்றில் 77 வயதான தற்போதைய அதிபர் டிரம்பை மறைமுகமாக குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்பின் கொள்கைகள், அறிவிப்புகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒபாமா பேட்டியில் கூறியிருப்பதாவது: உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதான ஆண்கள் அதிகாரத்தில் தொங்கி கொண்டிருப்பதால் ஏற்படுகிறது. பிரமிடுகள் உட்பட எல்லாவற்றிலும் தங்கள் பெயரை பொறிக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்படுகிறார்கள். மரணத்திற்கும், முக்கியத்துவமின்மைக்கும் அஞ்சுகிறார்கள். தங்கள் கவனிக்கப்படாமல் போய்விடுமோ, தங்களைப் பற்றி எதிர்காலம் பேசாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே பல பாதகமான முடிவுகளை எடுக்கின்றனர். ஓவல் அலுவலகத்தில் எனது வாரிசு, பாராசிட்டமல் மாத்திரைகளை உட்கொள்வதால் குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்புடன் பிறப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

இது பொது சுகாதாரத்தை எந்த அளவிற்கு குறைமதிப்பிற்கு உட்படுத்தும், கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும், மன இறுக்கம் உள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோருக்கு பதட்டத்தை உருவாக்கும். இது உண்மைக்கு எதிரான வன்முறை. அமெரிக்காவை குறிப்பிட்ட சிந்தனையை நோக்கி திசை திருப்ப பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் ‘நாம், நமது மக்கள்’ என பேசுவது சில மக்களை மட்டுமே. எல்லா மக்களையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

இவ்வாறு ஒபாமா பேசி உள்ளார்.

Advertisement

Related News