தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: பிரபல பாப் பாடகி விவாகரத்து: இரு மகள்கள் உள்ள நிலையில் திருப்பம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், பிரபல பாப் பாடகி கிரிஸ்டினா பெர்ரி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல அமெரிக்க பாப் பாடகியான கிரிஸ்டினா பெர்ரி, தனது கணவர் பால் காஸ்டபைலை விவாகரத்து செய்யக்கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர், ஏழு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்துள்ளனர். தங்களுக்கு இடையே தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கிரிஸ்டினா பெர்ரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்த தம்பதியினருக்கு கார்மெல்லா ஸ்டான்லி (7) மற்றும் பிக்ஸி ரோஸ் (3) என இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், தனது கணவரான பால் காஸ்டபைலுக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கான உரிமையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தங்களின் இரண்டு மகள்களையும் இருவரும் கூட்டாக கவனித்துக்கொள்ளும் வகையில் கூட்டுப் பாதுகாவலர் உரிமையை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின்போதே குழந்தை இறந்து பிறந்தது போன்ற துயரங்களையும் இந்த தம்பதியினர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவாகரத்து குறித்து கிரிஸ்டினா பெர்ரி மற்றும் அவரது கணவர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Advertisement

Related News