தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழப்பு

 

Advertisement

இலங்கை: இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழந்தனர். 7 பேரில் ஒரு இந்தியர், ஒரு ரஷ்யர், ஒரு ருமேனிய நாட்டவர் கேபிள் காரில் பயணித்ததாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ள நிகவெரட்டி புத்த மடாலயத்தில் கேபிள் கார் விபத்துகுள்ளானது.இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் .

இலங்கையில் நிக்கவேரட்டியா அருகே நா உயன ஆரண்ய சேனாசனய என்ற ஒரு மடம் அமைந்துள்ளது. இது கொழும்புவில் இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் தியானம் செய்ய வருகை தருவார்கள்.

இங்கு தரைப் பகுதியில் இருந்து கேபிள் கார் மூலம் துறவிகள் மலையில் இருக்கும் தியான மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில், ஒரு சிறிய கேபிள் கார் பெட்டியில் துறவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கேபிள் கார் பெட்டியின் கேபிள் அறுந்து விட்டது. இதனால், கார் வேகமாக கீழே இறங்கி வந்து ஒரு மரத்தில் பலமாக மோதியது.

இந்த காரில் 13 துறவிகள் பயணம் செய்தனர். இதில், இந்தியா வை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறந்தவர்களில் இந்தியா, ரஷ்யா, ரோமானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு துறவிகளும் அடங்குவர். காயம் அடைந்த ஆறு பேரில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்த போது, அதிகமான பொதுமக்கள் அந்த சிறிய காரில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து கேபிள் அறுந்ததற்கான காரணம் என்ன. காரில் அதிக நபர்கள் இருந்தார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொடூர விபத்து, மடத்துக்கு தியானத்துக்காக வந்திருந்த மற்ற துறவிகள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான துறவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

 

Advertisement

Related News