தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு; நிலச்சரிவுகளில் சிக்கி 7 பேர் பலி

 

ஜம்மு: காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில், கடந்த 14ல் திடீர் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சிசோட்டி கிராமத்தை ஒட்டிய மலைப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடைகள், வீடுகள், ஓட்டல்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.மேலும் 80 பேரை காணவில்லை.இந்த நிலையில் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 5 பேர் காயமடைந்தனர். கதுவா மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கிஷ்த்துவாரில் மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணி 4வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

*இமாச்சலிலும் நிலச்சரிவு

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகளுக்குள் இடிபாடுகள் விழுந்துள்ளன. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.