தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

Advertisement

இரா.கண்ணன் (கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குநர்) தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளர் மற்றும் தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

சா.ப.அம்ரித் (சென்னை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்) கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ச.கவிதா (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.முத்துக்குமரன் (தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, இணை இயக்குநர் - பேரிடர் மேலாண்மை) தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.எஸ்.லீலா அலெக்ஸ் (தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்ற நிறுவனம்-சிப்காட் பொது மேலாளர்) - சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மு.வீரப்பன் (சென்னை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம், ஆணையர்) சென்னை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரா.ரேவதி (தனி மாவட்ட வருவாய் அலுவலர்-நில எடுப்பு, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், திருநெல்வேலி) உயர்கல்வி துறை அரசு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement