தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வடக்கு பொய்கை நல்லூர், மேவாழக்கரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 780 கோரிக்கை மனுக்கள்

*நாகை கலெக்டர் நேரில் ஆய்வு

கீழ்வேளூர் : நாகப்பட்டினம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலவாழக்கரை பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை நாகை கலெக்டர் ஆகாஷ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட 6ம் நாள் முகாம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு வடக்கு பொய்கை நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதே போல, கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மடப்புரம், மேலவாழக்கரை, மீனம்பநல்லூர், ஈசனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு மேலவாழக்கரை சரஸ்வதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியிலும் நடைபெற்றது. இந்த முகாம்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இந்த திட்ட முகாமில் சுமார் 780 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் உடனடி தீர்வாக மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆணை, வருமானச் சான்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, பெயர் மாற்றம் பட்டா நகல் போன்றவைகளை பயனாளிகளுக்கு நாகை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், செபஸ்தியம்மாள், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், அரிகிருஷ்ணன், நாகப்பட்டினம் மற்றும் திருக்குவளை வட்டாட்சியர்கள் நீலாதாட்சி, கிரிஜாதேவி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.