தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனப்பகுதிக்குள் கற்களை திருட முயன்ற 7 பேர் அதிரடி கைது

ஊட்டி : ஊட்டி வென்லாக் டவுன் வனப்பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து கற்களை உடைத்து திருட முயன்ற 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட வென்லாக் டவுன் காப்பு காட்டிற்குட்பட்ட எச்பிஎப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிலர் கற்களை உடைப்பதாகவும், மண்ணை எடுத்து செல்வதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வடக்கு வனசரகத்திற்குட்பட்ட வன ஊழியர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
Advertisement

அப்போது, ஊட்டி தலை குந்தா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (43), நாகராஜ் (32), சந்தோஷ் (31), ஈஸ்வரன் (34), கல்லட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (49), ஆகியோர் வனப்பகுதிக்குள் கற்களை உடைத்தும், அங்கிருந்த மண்ணையும் எடுத்து செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று, எச்பிஎப் வனப்பகுதியில் கற்களை உடைத்த ஊட்டி வீசி காலனி பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (32), காந்தல் பகுதியை சேர்ந்த அகமதுல்லா (32), ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுடன் அத்துமீறி வனத்திற்குள் சென்று கற்களை உடைத்த மூன்று பேர் தப்பி விட்டனர். அவர்களையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News