தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கென்யாவில் நடந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இந்தியர் பலி: உடல்களை கொண்டு வர நடவடிக்கை

Advertisement

புதுடெல்லி: கென்யாவில் நடந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இந்தியர் பலியான நிலையில், அவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கென்யா நாட்டின் நயந்தருவா கவுண்டியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு மலைப்பகுதியில் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பலமுறை உருண்டு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி, மழை பெய்யத் தொடங்கிய சிறிது நேரத்தில், செங்குத்தான பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் மாவேலிக்கரையைச் சேர்ந்த கீதா ஷோஜி ஐசக் (58), ஜஸ்னா குட்டிக்காட்டுச்சாலில் (29), ரூஹி மெஹ்ரி முகமது (ஒன்றரை வயது), ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த ரியா ஆன் (41), டைரா ரோட்ரிக்ஸ் (8) ஆகிய 6 இந்தியர்கள் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆறாவது இந்தியரின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தின்போது பேருந்தில் 28 சுற்றுலாப் பயணிகள், மூன்று உள்ளூர் வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர் இருந்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், இந்த விபத்து மிகவும் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை அவசர அடிப்படையில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அலுவலகம், ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம், உடல்களை விரைவாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

Advertisement