தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னை விமானநிலையத்தில் ஒரே நாளில் 6 விமான சேவைகள் திடீர் ரத்து: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் மாலை முதல் இரவு வரை 3 விமானங்களின் வருகை, 3 விமானங்களின் புறப்பாடு என 6 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது. இவை நிர்வாக காரணங்கள் மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், அதில் செல்லவேண்டிய 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் நேற்று மாலை 3 மணியளவில் கர்நாடகாவின் சிவமோகா செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம், இரவு 8.35 மணியளவில் கொச்சி செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9 மணியளவில் கோழிக்கோடு செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்களின் புறப்பாடு திடீரென ரத்து செய்யப்பட்டது.

அதேபோல், நேற்று மாலை முதல் இரவு வரை கோழிக்கோட்டில் இருந்து சென்னை வரும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம், அந்தமானில் இருந்து சென்னை வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், கர்நாடகாவின் சிவமோகாவில் இருந்து சென்னை வரும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தம் 3 விமானங்களின் வருகையும் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் மாலை முதல் இரவு வரை 3 விமானங்களின் புறப்பாடு மற்றும் 3 விமானங்களின் வருகை என மொத்தம் 6 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால், அதில் செல்லவேண்டிய 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மேற்கண்ட 6 விமானங்களின் சேவையும் நிர்வாக காரணங்கள் மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து இவ்விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு ஏற்கெனவே குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று தெரிவித்தனர்.

 

Related News