தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத் மலைக்கோயிலில் கேபிள் அறுந்து 6 பேர் பலி

ஹாலால்: குஜராத்தில் மகாகாளிகா கோயிலுக்கு சென்ற சரக்கு ரோப்வே கேபிள் அறுந்து விழுந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பாவகத் மலை மீது மகாகாளிகா கோயில் அமைந்துள்ளது. சுமார் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு பக்தர்கள் சுமார் 2000 படிக்கட்டுகளை ஏறிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் ரோப்வே மூலமாக செல்லலாம். இந்நிலையில் நேற்று காலை மோசமான வானிலை நிலவியதால் பிரதான ரோப்வே இரண்டு நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

இதனிடையே கோயிலுக்கு சரக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு ரோப்வே டிராலி சென்றது. இதில் இரண்டு லிப்ட் ஆப்ரேட்டர்கள், இரண்டு தொழிலாளர்கள் உட்பட 6 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திடீரென ரோப்வேயின் கேபிள் வயர் அறுந்ததால் டிராலி கீழே விழுந்துள்ளது. இதில் டிராலியில் இருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனினும் கேபிள் வயர் எந்த உயரத்தில் இருந்து அறுந்து விழுந்தது என்பது குறித்த விவரங்கள் உறுதியாக தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

மலையின் மேல் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரோப்வே டிராலி கேபிள்கள் பிற்பகல் 3:30 மணியளவில் நான்காவது கோபுரத்திலிருந்து அறுந்து விழுந்தது விசாரணையில் தெரிய வந்தது. பஞ்ச்மஹால் மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Advertisement

Related News