தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஏமன் கடலில் படகு மூழ்கியதால் 68 அகதிகள் பலி: 74 பேர் மாயம்

 

ஏமன்: ஏமனுக்குள் நுழைய முயன்ற ஆப்பிரிக்க நாட்டு அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 68 பேர் உயிரிழந்ததோடு 74 பேரைக் காணவில்லை. ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்து ஏமன் வழியாக சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு 97,200 பேர் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இந்த கடல் வழித்தடத்தில் 2,082 பேர் காணாமல் போயுள்ளனர்; அவர்களில் 693 பேர் நீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 154 அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று, ஏமனின் தெற்குப் பகுதியில் உள்ள அபியான் மாகாணக் கடல் பகுதியில் கவிழ்ந்து மூழ்கியது. இந்த கோர விபத்தில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாகவும், 74 பேரைக் காணவில்லை எனவும் ஐ.நா.வின் புலம்பெயர்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் இருந்து 9 எத்தியோப்பியர்கள் மற்றும் ஒரு ஏமன் நாட்டவர் என மொத்தம் 10 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன பலரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related News