தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 6 பேர் கைது

* 5 கிலோ கஞ்சா பறிமுதல்

Advertisement

* ஒருவர் தப்பி ஓட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை பேருந்து நிலையம் அருகே ரோசணை காவல் ஆய்வாளர் தரனேஸ்வரி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த பைக்குகளை நிறுத்திபோது போலீசார் மீது இடிப்பது போல் சென்று அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வெளிமேடுபேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மற்றவர்களை விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். பைக்குகளில் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் 6 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் வந்தவாசி தாலுகா சு.காட்டேரி பகுதியைச் சேர்ந்த கவியரசு(23), அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (23), விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த ரகுபதி (19), வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த குபேந்திரன்(19), திண்டிவனம் கீழ்மலையனூர் பகுதியை சேர்ந்த டிராவிட் (19) தாதாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(20) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சா இரண்டு பைக்குகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் திருப்பதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திண்டிவனம், வந்தவாசி பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News