தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் ஒரே நாளில் மாயமான 5 சிறுவர், சிறுமியர் மீட்பு: போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

 

Advertisement

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் கடந்த 10ம் தேதி மாயமாகினர். இதுகுறித்து விரும்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதேபோல், விரும்பாக்கத்தில் 15 வயது மாணவன் ஒருவன் கடந்த 10ம் தேதி மாயமானான். புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், 2 சிறுமிகள் தன்னுடன் படித்த மற்றொரு மாணவி வீட்டில் இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்டு விசாரணை நடத்திய போது, 16 வயது சிறுமிக்கு கடந்த 10ம் தேதி பிறந்த நாள், அன்றை தினம் தனது அப்பா திட்டியதால் கோபித்து கொண்டு தனது தோழியுடன் சக மாணவி வீட்டில் தங்கியது தெரியவந்தது. உடனே போலீசார் 2 சிறுமிகளையும் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் மாயமான மாணவன் வடபழனியில் உள்ள பார்க் ஒன்றில் அமர்ந்து இருந்தது தெரியவந்தது. அவனையும் மீட்டு பற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அண்ணா சதுக்கம் போலீசார் கடந்த 10ம் தேதி இரவு வாலாஜா சாலையில் ரோந்து சென்றபோது, சிறுமி மற்றும் சிறுவன் ஒருவர் தனியாக அமர்ந்து இருந்தனர். விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது தம்பியான 12 வயது சிறுவன் என்பதும், தனது தந்தை மற்றும் பெரியம்மா கடுமையாக பேசியதால் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் இருவரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஒரே நாளில் மாயமான 3 சிறுமிகள் மற்றும் 2 சிறுவர்களை விரைந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை கமிஷனர் அருண் பாராட்டினார்.

 

Advertisement