தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் தெலங்கானா வாலிபர்

ராமநாதபுரம்: சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, தெலங்கானாவைச் சேர்ந்த வாலிபர் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில் உள்ள கஜ்வெல் நகரைச் சேர்ந்த நாம்தேவ்-அஞ்சம்மாள் தம்பதி மகன் சிவகோடி (26). டிப்ளமோ பட்டதாரியான இவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ராமேஸ்வரம் செல்லும் வழியில், ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: பொழுது போக்கிற்காக எனது மாநிலத்தில் அவ்வப்போது சைக்கிள் பயணம் மேற்கொள்வேன். இதனிடையே, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நீர்சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் செல்ல திட்டமிட்டேன்.
Advertisement

இதன்படி, ஐதராபாத்தில் கடந்த மே 28ம் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். ஆந்திரா மாநிலம் நெல்லூர், திருப்பதி வழியாக வந்து தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு வந்தேன். அங்கிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி செல்கிறேன். பின்னர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்துக்கு செல்கிறேன். நாடு முழுவதும் 50 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் செய்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இதற்கு ஓராண்டு ஆகலாம். இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க், கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் தங்கிக் கொள்கிறேன். ஓய்வு எடுக்கும் இடங்களில் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்வேன். இவ்வாறு எனது பயணம் தொடர்கிறது’ என்றார்.

 

Advertisement

Related News