தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் பகுதியில் 5,000மீனவர்கள் 10வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் 5,000 மீனவர்கள் கடலுக்குகள் மீன்பிடிக்கச்செல்லவில்லை. இதனால் மீன்கள் விலை சற்று உயர்ந்தது.

Advertisement

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர், நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, விழுந்தமாவடி , வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம் , புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவிப்பு செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடிக்கரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 5000 ஆயிரம் மீனவர்கள் 10 வது நாளாகமீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லைஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

மீனவர்கள் கடற்கரை ஓரங்களில் வைத்து இருந்த படகுகளையும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். மீன்வளத்துறையின் மறு அறிவிப்பு வந்த பிறகே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இயலும் என்ற நிலையில் மீனவர்கள் வீடுகளில் முடங்கி போய் உள்ளனர்.

பத்து நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் மீன்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. இதே வேளையில் மீனவர்கள் கரைவலைக்கு சென்று சிறிதளவு மீன்களை பிடித்து உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதனால் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்த காலாமின் ரூபாய் 700க்கும், வாவல் மீன் ஒரு கிலோ 1000த்தில் இருந்து ரூபாய் 1400 க்கு, 300 ரூபாய்க்கு விற்பனை செய்த இறால் 400 ரூபாய்க்கும், 350க்கு விற்பனை செய்த நண்டு 500க்கும் விற்பனை ஆகிறது.

மீன் பிடிக்கச் செல்லஇன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும், அதுவரை இந்த விலை உயர்வு குறைய வாய்ப்பில்லை என்றும், பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றால் விலை குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Related News