தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி அருகே கால்வாயில் தவறி விழுந்து 5 மாத குட்டி யானை உயிரிழப்பு

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள மாயார் அணை கால்வாயில் 5 மாத ஆண் குட்டி யானை தவறி விழுந்து உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, மங்களப்பட்டி, தெங்குமரஹாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி மற்றும் பல்வேறு வகை மான்கள் உள்ளன. குறிப்பாக இந்த வனப்பகுதியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், மசினகுடி வனச்சரகத்திற்குட்பட்ட அவரல்லா பகுதியில் வனத்துறையினர் தங்களது வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாயார் அணை கால்வாயில் குட்டி யானை இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.

Advertisement

இது குறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு துணை இயக்குநர் வித்யாதர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், இறந்தது பிறந்து 5 மாதங்களே ஆன ஆண் குட்டி யானை என்பது தெரியவந்தது. பின்னர் தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமாரை அங்கு வரவழைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. குட்டி யானை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News