தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் 4-வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி பதிலளிக்க ராகுல்காந்தி வலியுறுத்தல்

Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 4-வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல் நடந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. தோடா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே ரீசி மற்றும் கத்துவா பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1 வாரத்தில் 4 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாத தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள 4 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கத்துவா மாவட்ட எஸ்பி சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற ஜூன் 9-ம் தேதி ரீசியில் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் 4 தீவிரவாதிகளின் வரைபடத்தை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு போலீஸ் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement