தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் சப்ளை, தகாத செயல்களை தட்டிக்கேட்ட அண்டை வீட்டார் மீது ‘ஆசிட்’ வீச்சு: மாணவிகள் உட்பட 4 பெண்கள் கைது

துர்க்: சட்டீஸ்கரில் தகாத நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்ட அண்டை வீட்டார் மீது ஆசிட் வீசித் தாக்குதல் நடத்திய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் சித்தார்த் நகர் பகுதியில் வசிக்கும் சில பெண்கள், தங்கள் வீட்டில் இளைஞர்களை வரவழைத்து போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலமுறை எச்சரித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று அண்டை வீட்டார் ஒன்று திரண்டு சென்று, ‘வெளியாட்களை வீட்டிற்கு அழைக்க வேண்டாம், போதைப் பழக்கத்தை நிறுத்துங்கள்’ என்று அந்தப் பெண்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

இந்த விவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் வீட்டிற்குள் ஓடிச் சென்று ஒருவித திரவத்தை (ஆசிட்) எடுத்து வந்து பொதுமக்கள் மீது வீசியதோடு, கத்தி மற்றும் பிளேடுகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சோனி குர்ரே என்பவர் கண்ணில் காயமடைந்தது உட்பட பலர் படுகாயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ‘குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்; கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முழக்கமிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக, தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு மாணவிகள் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement