4 மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்: கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவியது. அதைத் தொடர்ந்து மருத்துவக்குழுவினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். இந்த பரிசோதனையில் 4 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. காய்ச்சல் உள்ள மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து கொல்லம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.