தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுவன் உயிரிழந்த வழக்கில் 4 போலீசாருக்கு 11 ஆண்டு சிறை: மதுரை நீதிமன்றம் உத்தரவு

மதுரை: காவல் நிலைய விசாரணைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் உள்பட 4 போலீசாருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. 2019ல் குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிறுவன் கார்த்திக்(17) எஸ்.எஸ்.குடியிருப்பு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். முத்துகார்த்திக்கை கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முத்து கார்த்திக் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். தனது மகன் இறப்புக்கு காரணமான மதுரை எஸ்எஸ் காலனி போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க தாயார் வழக்கு வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் உள்பட 4 போலீசாருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. சாட்சிகளை அழிக்க முயன்ற காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கூராய்வின் போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement