தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி: திருப்பத்தூரை சேர்ந்தவர்கள்

திருப்பத்தூர்: சத்தீஸ்கரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவரது 2 மகள்கள் பரிதாபமாக பலியானார். தம்பியின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தபோது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச்சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(45), இவர் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இதனால் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகதல்பூரில் மனைவி பவித்ரா(38), மகள்கள் சவுத்தியா(8), சவுமிகா(6) ஆகியோருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் ராஜேஷ்குமாரின் தம்பிக்கு ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ராஜேஷ்குமார் தனது மனைவி பவித்ரா, மகள்கள் சவுத்தியா, சவுமிகா ஆகியோருடன் நேற்று காரில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சொந்த ஊரான திருப்பத்தூருக்கு புறப்பட்டார்.

Advertisement

அப்போது சத்தீஸ்கரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது. நேற்றிரவு டர்பந்தனா என்ற இடத்தில் வந்தபோது மழைநீர் மற்றம் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் இருந்து வெளியே வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ராஜேஷ்குமாரின் கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்த தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலமணிநேரம் போராடி காரை மீட்டனர். ஆனால் காரில் இருந்த ராஜேஷ்குமார், பவித்ரா, சவுத்தியா, சவுமிகா ஆகிய 4 பேரும் சடலமாக கிடந்தனர். இயைதடுத்து போலீசார் 4பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக திருப்பதியில் இன்று நடக்க இருந்த ராஜேஷ்குமாரின் தம்பி திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஷ்குமார் உள்பட 4 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனை முடிந்து 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டபள்ளி கிராமத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தம்பியின் திருமணத்தை காண புறப்பட்ட ராஜேஷ்குமார், மனைவி, மகள்களுடன் வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News