தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட நீதிபதிகள் 45 பேர் இடமாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு

Advertisement

சென்னை: தமிழகம் முழுவதும் 45 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 13 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் சென்னை மாவட்ட நீதிபதிகளின் இடமாற்ற விபரம் வருமாறு: திருப்பூர் தலைமை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் ஜெ.ஓம்பிரகாஷ் சென்னை 14வது சிட்டி சிவில் நீதிமன்ற (சிபிஐ நீதிமன்றம்) கூடுதல் நீதிபதியாகவும், தமிழ் சட்ட இதழ் இணை ஆசிரியர் டி.டி.சக்ரவர்த்தி சென்னை நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சென்னை மாவட்ட போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 10வது கூடுதல் நீதிபதியாகவும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவாளர் (சட்டம்) என்.முரளிதரன் ஊட்டி மாவட்ட நீதிபதியாகவும், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதியாகவும், தருமபுரி குடும்பநல நீதிமன்ற நீதிபதி கே.கீதாராணி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 8வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.மலர்வாலண்டினா அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகவும், கடலூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி பி.வித்யா எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டாகவும், விழுப்புரம் குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐஸ்வரானே சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சென்னை 8வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement