தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி அனைத்து துறை அதிகாரிகளிடம் எஸ்ஐடி 4 மணி நேரம் விசாரணை: கரூரில் 2ம் நாளாக நடந்தது

 

Advertisement

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினரின் (எஸ்ஐடி) ஆய்வு கரூரில் 2வது நாளாக நடந்தது. நேற்று நடந்த ஆய்வில் அனைத்து துறை அதிகாரிகளிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூர் ேவலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி பிரசாரத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழுவினர் கரூரில் கடந்த 2 நாள் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொது செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் இருவரும் கைதுக்கு பயந்து தலைமறைவானர்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி விமலா, சிவில் சப்ளை சிஐடி எஸ்பி ஷியாமளா ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவினர் நேற்றுமுன்தினம் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் சுமார் 45 நிமிடம் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இந்த சிறப்பு விசாரணை குழுவினர், நேற்று 2வது நாளாக 3 பிரிவுகளாக பிரிந்து விசாரணையில் இறங்கினர். இதில் ஒரு பிரிவினர் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல்களை நேரில் ஆய்வு செய்தனர். இதேபோல் ஒரு பிரிவினர் நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கை குறித்து ஆய்வு பணியில் ஈடுட்டனர். மற்றொரு பிரிவினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து துறை வாரியாக தனித்தனியாக விசாரணை நடத்தினர். கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2மணி வரை நடந்தது. பின்னர் இந்த குழுவினர், மாலை 3 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

Advertisement