தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடத்தில் இளம் பெண்ணிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி: 4 வாலிபர்கள் கைது

பல்லடம் : பல்லடத்தில் இளம்பெண்ணிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது பணிக்கம்பட்டி. இங்குள்ள சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி நதியா (33). இவர் சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தின் பல்லடம் பகுதிக்கு பணம் வசூலிப்பாளராக உள்ளார்.

Advertisement

கடந்த 17ம் தேதி இவர் பல்லடம் பணப்பாளையம் - பெத்தாம்பாளையம் ரோடு இட்டேரி வீதியில் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், நதியாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து, நதியாவை ஸ்கூட்டருடன் கீழே தள்ளி, அவரிடம் இருந்து ரூ.9 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பி சென்றனர்.

இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் நேற்று பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சேலத்தை சேர்ந்த பிரகாஷ் (35), பிரவீன் குமார் (34) என்பதும், இதில், பிரகாஷ் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நதியா பணம் வசூல் செய்வதை நோட்டமிட்டு வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

இவர்கள் கூறிய தகவலின் பேரில் தேனியை சேர்ந்த லெனின்குமார் (24), பாலாஜி (22) ஆகியோர் நதியாவிடம் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் இவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்து 99 ஆயிரம், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News