தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய், மகன், மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி

*சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Advertisement

சிவகங்கை : அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தாமதித்ததாக கூறி பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகன், மகள் உட்பட 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை அருகே கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாலமுருகன், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு தாமதித்ததால் பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் பயிற்சி மருத்துவர்களை தாக்கியதாகவும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பயிற்சி மருத்துவர்களை, தாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறியும், உரிய சிகிச்சை அளிக்காமல் தாமதித்த பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு பாலமுருகன் மற்றும் அவரது தங்கை, தாய் மற்றும் உறவினர் என 4 பேர் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement