தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசி அருகே பயங்கரம் பட்டாசு ஆலை வெடித்து 3 தொழிலாளிகள் கருகி பலி: 2 பெண்கள் படுகாயம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் - அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 50 அறைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் செய்யும் பணியில் நேற்று 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் மருந்து உராய்வு ஏற்பட்டு பயங்கரமாக வெடித்து சிதறியது. தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவி 4 அறைகள் தரைமட்டமாகின. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement

அதற்குள் சிவகாசி அருகே பள்ளபட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (25), சிவசாமி மனைவி சங்கீதா (43), குருசாமி மனைவி லட்சுமி (45) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மாரியம்மன் (50), நாகலட்சுமி (55) ஆகியோர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement

Related News