3வது நாளாக போலீஸ் வேட்டை : 170 பேர் கைது: பைக்கில் ரோந்து சென்று சாராய ஊறலை அழித்த திருச்சி கலெக்டர், எஸ்பி
தனிப்படை போலீசாரும் உடன் சென்றனர். அப்போது பச்சமலை நேசக்குளம் ரமேஷ்(36) என்பவரது தோட்டத்தில் பதுக்கிய 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2லிட்டர் காய்ச்சிய சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர் நேசக்குளம் கிராம பொதுமக்களை அழைத்து, கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. புதுச்சேரியில் இருந்து சாராயம், மதுபானங்களை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் கடந்த 3 நாட்களில் சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 165 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 310 லிட்டர் சாராயம் மற்றும் 1638 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.
* குழந்தையை அணைத்தபடி போதையில் கிடந்த தந்தை
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கருணாபுரம் பகுதியில் வசித்து வந்த ராசாத்தி என்பவர் விஷ சாராயம் குடித்ததாக நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் சென்ற கணவர், மனைவியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பியவர் அன்றைய தினம் இரவு மது வாங்கி குடித்துவிட்டு தனது குழந்தையை அணைத்தபடி கருணாபுரம் பகுதியில் போதையில் படுத்து கிடந்தார். விஷ சாராய துக்க வீட்டிற்கு வந்து சென்றவர்கள் மட்டுமின்றி, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற வந்தவர்களும் இதை பார்த்து முணுமுணுத்தபடி சென்றனர்.
தூத்துக்குடி இனிகோ நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சோதனையில் உயர் ரக போதைப்பொருளான ஐஸ் என அழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி விற்பனை செய்து வந்த இனிகோ நகரை சேர்ந்த நிர்மல்ராஜ் (28), அவரது மனைவி ஷிபானி(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் இந்திய மதிப்பு ரூ.8 கோடி என்றும், சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இது இலங்கைக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களுக்கு உதவியாக இருந்த ஷிபானியின் தங்கையான இனிகோ நகரை சேர்ந்த ப்ரீஸ்டா(25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் ஆட்டோவில் சென்று போதைப்பொருளை ஒருவருக்கு சப்ளை செய்தது அம்பலமானது. ஷிபானியின் தந்தை தாசனை தேடி வருகின்றனர்.