தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3வதும் பெண் குழந்தை என்பதால் சட்டவிரோத கருக்கலைப்பு கர்ப்பிணி பரிதாப பலி: நாடகமாடிய கணவர் உள்பட 3 பேர் கைது

பென்னாகரம்: சட்டவிரோத கருக்கலைப்பால் கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூர் பூச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). கூலி தொழிலாளியான இவரது மனைவி ரம்யா (27). இவர்களுக்கு 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அவர், கடந்த 1ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறி அவரது கணவர் கண்ணன் கண்ணீர் வடித்தார்.

இதனிடையே, ரம்யாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி, உறவினர்கள் ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், ரம்யாவிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக பெண் குழந்தை பிறப்பதை தவிர்க்க கண்ணன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா-பெண்ணா என, சட்டவிரோதமாக ஸ்கேன் மூலம் பரிசோதித்துள்ளார். இதில், பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த செவிலியர் சுகன்யா(35), புரோக்கர் வனிதா(34) ஆகியோருடன் சேர்ந்து, ரம்யாவிற்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.

அப்போது அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே ரம்யா உயிரிழந்தார். சட்ட விரோத கருக்கலைப்பால் ஏற்பட்ட மரணத்தை மறைக்க மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கண்ணன் நாடகமாடியது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்ணன் மற்றும் உடந்தையாக இருந்த சுகன்யா, வனிதா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement

Related News