தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3வது ஓடிஐயில் இமாலய வெற்றி: ஒயிட்வாஷ் ஆன ஆஸி இளம் இந்தியா சாதனை

பிரிஸ்பேன்: இளம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 167 ரன் வித்தியாசத்தில் அமர்க்கள வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளம் இந்தியா கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய இளம் அணியின் துவக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி 16, கேப்டன் ஆயுஷ் மாத்ரே 4 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

Advertisement

பின்னர் ஆடிய விஹான் மல்கோத்ரா 40, வேதாந்த் திரிவேதி, 86, ராகுல் குமார் 62 ரன் குவித்ததால், 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன் விளாசியது. ஆஸி தரப்பில் வில் பைரோம், கேஸி பார்டன் தலா 3 விக்கெட் சாய்த்தனர். பின்னர், 281 ரன் வெற்றி இலக்குடன் ஆஸி களமிறங்கியது. இளம் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளில் அனல் தெறித்ததால் ஆட முடியாமல் ஆஸி வீரர்கள் திணறினர். 28.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட ஆஸி அணி, 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால் இந்தியா 167 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் கிலன் படேல் 4, உத்தவ் மோகன் 3, கனிஷ்க் சவுகான் 2 விக்கெட்டுகளை சாய்தனர். இதன் மூலம் இத்தொடரின் 3 போட்டிகளிலும் இந்திய அணி வென்று ஆஸியை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.

Advertisement