தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் விஜயகுமார், கொத்தனார். இவரது மகன் சஞ்சய் (10). அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாரிமுத்துவின் மகள்கள் பிரியதர்ஷினி (10) சுபாஷினி (8). இவர்கள் 3 பேரும் கோனேரிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் முறையே 5, 6, 3ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்ததும் நல்லாத்தூரிலிருந்து ஓங்கூர் செல்லும் ஆற்றங்கரையில் உள்ள நாவல் மரத்தில் நாவற்பழம் பறிக்க சென்றுள்ளனர். சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஆற்றில் நீர் அதிகளவில் செல்லும் நிலையில், நாவற்பழம் பறிக்கும்போது எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கினர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்தபோது பள்ளி சீருடை மட்டும் நீரில் மேலே தெரிந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின்படி ஒலக்கூர் போலீசார் வந்து பார்த்தபோது 3 சிறுவர், சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
Advertisement

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement