தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 வேளாண் சட்டங்களை விட மோசமானது தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

Advertisement

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு புதிய தேசிய வேளாண் சந்தைக் கொள்கையை, வரைவு அறிக்கையாக வெளியிட்டு கருத்து கேட்டு வருகிறது. ஒன்றிய அரசின் புதிய தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு அறிக்கை விவசாயிகளின் ஓராண்டுகால போராட்டத்தால் தூக்கி எறியப்பட்ட 3 வேளாண் சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது 3 வேளாண் சட்டங்களை விட மிக மோசமானது என விவசாயிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறைந்தபட்ச ஆதாரவிலை, குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரம் தனியார்மயமாக்குவதைத் தடுப்பது மற்றும் எல்ஏஆர்ஆர் 2013 சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை அடைவதற்காக விவசாயிகள் போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். விவசாய அமைப்புகள் ஜனவரி 9ம்தேதி பஞ்சாபின் மோகாவில் போராட்டத்தைத் தொடங்குவதற்கு அறைகூவல் விடுத்துள்ளன. பஞ்சாப் மாநில அரசு இந்த வரைவு அறிக்கையை நிராகரித்ததை போல தமிழ்நாடு அரசும் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News