தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கல்லூரி மாணவிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்: 3 வாலிபர்கள் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே போலி இன்ஸ்டா கணக்கு தொடங்கி கல்லூரி மாணவிக்கு மார்பிங் செய்த ஆபாச போட்டோக்களை அனுப்பி ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கொண்டோட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில், அவரது ஆபாச போட்டோக்கள் வந்தன. அதை பார்த்து முதலில் அவர் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து போட்டோக்களை பரிசோதித்தபோது அது மார்பிங் செய்து இருந்தது தெரியவந்தது. இதனால் அதை மாணவி கண்டுகொள்ளாமல் இருந்தார். இந்தநிலையில் சில நாள் கழித்து அதே இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து மாணவிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உடனே ரூ. 5 லட்சம் அனுப்பி வைக்காவிட்டால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து மாணவி கொண்டோட்டி போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகும் மாணவிக்கு தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் வந்தது. இதனால் பயந்த மாணவி மிரட்டல் விடுத்த நபருக்கு 2 பவுன் தங்க செயினை கொடுக்க தீர்மானித்தார். இந்த தகவல் போலீசுக்கு தெரியவந்தது. இதனால் போலீசார் மாணவியை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாணவி மிரட்டல் விடுத்த நபருக்கு தனது செயினை கொடுக்க செல்வது தெரியவந்தது. அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் மிரட்டல் விடுத்த நபரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் கொண்டோட்டி பகுதியை சேர்ந்த முகம்மது தஷ்ரீப் (21) என்பது தெரியவந்தது.

பின்னர் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களான முகம்மது நிதாஸ் (21), முகம்மது ஷான் (22) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தஷ்ரீப் மாணவியுடன் ஒரே பள்ளியில் படித்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி அவரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின் 3 பேரையும் போலீசார் மலப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related News