தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Advertisement

கடலூர்: செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்கு காரணம் என்பது உறுதியானது. கடலூர் செம்மங்குப்பத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்கு காரணம் என்பது உறுதியானது. செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை மூடிவிட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பொய் கூறியதும் அம்பலமாகியுள்ளது.

ஆலப்பாக்கம் நிலைய அதிகாரியிடம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தவறான தகவலை கூறியது அம்பலமாகியுள்ளது. ரயில்வே கேட்டை மூடாமலே மூடியதாக பிரைவேட் நம்பரை ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு கொடுத்துள்ளார். விபத்து நடந்தவுடன் கேட் கீப்பர், கேட்டை மூடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ரயில் நிலைய அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டை மூடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரியுடன் பங்கஜ் சர்மா பேசிய தொலைபேசி உரையாடல் பதிவாகி உள்ளது.

ரயில்வேதுறையின் தானியங்கி தொலைபேசி உரையாடல் பதிவை போலீசார் சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில் கிடைத்துள்ள தகவல் மூலம் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement