தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்ஸ்டாகிராம் வீடியோவால் விபரீதம்; ஆலங்குளம் இளம்பெண் தற்கொலையில் 3 பேர் கைது: நண்பர்களும் உல்லாசத்திற்கு அழைத்ததால் அதிர்ச்சி

 

Advertisement

நெல்லை: இன்ஸ்டாகிராமில் பழகியவர் வீடியோ வெளியிட்டதால், ஆலங்குளத்தில் இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமி (26). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லை. பிரேம் சரண் ஆலங்குளத்தில் உள்ள அரசு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முத்துலட்சுமியின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முத்துலட்சுமி அதே பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆலங்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின. போலீசார் விசாரணையில் முத்துலட்சுமிக்கும், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சக்திவேல்(32) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதும், அதைத் தொடர்ந்து அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துள்ளதும் தெரிய வந்தது. சக்திவேல் ஆலங்குளத்தில் உள்ள ஒரு டிராக்டர் ஓர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார். உறவினர்கள் முத்துலட்சுமியை கண்டித்த நிலையில், அவர் சக்திவேலிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து முத்துலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டினாராம்.

இதையடுத்து முத்துலட்சுமி தனது பெற்றோரிடம் தகவல்களை தெரிவித்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் வாலிபர், இளம்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை அழித்துள்ளனர். ஆனால் தனது மனைவியின் செல்போனில் மறைத்து வைத்திருந்த இளம்பெண்ணின் படங்களை சக்திவேல், ஓர்க்‌ஷாப்பிற்கு அடிக்கடி வரும் மருதம்புத்தூரை சேர்ந்த முத்துராஜ்(36) என்பவருக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (42) என்பவரும் சேர்ந்து கொண்டு, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை தங்கள் ஆசைக்கும் இணங்குமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியுள்ளது.

இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர் தற்கொலைக்கு காரணமான சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உருக்கமான கடிதம் சிக்கியது

இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியுள்ளது. அதில் அவர் 8 பக்கங்களில் தனது தற்கொலைக்கு சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய 3 பேர் காரணம் என கூறியுள்ளதோடு, பணம் கேட்டு மிரட்டியதால், தான் எவ்வளவு பணத்தை இழந்துள்ளேன் என்பதையும் தெரிவித்துள்ளார். தன்னை எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்பது குறித்தெல்லாம் அதில் கூறியுள்ளார்.

Advertisement