தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் 357 மனுக்கள் பெறப்பட்டன

*மாணவர்களுக்கு விருது வழங்கி கலெக்டர் பாராட்டு
Advertisement

திருவாரூர் : திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 357 மனுக்கள் பெறப்பட்டன. காமராசர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் 30 பேர்களுக்கு பரிசுத்தொகையுடன் சான்றிதழினை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.

திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 357 மனுக்களை அளித்தனர்.

பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகனசந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி பெருந்தலைவர் காமராசர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேர்களுக்கு பரிசுத்தொகையுடன் சான்றிதழினை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஒ கலைவாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் தையல்நாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லபாண்டி, முதன்மை கல்வி அலுவலர் சௌந்திரராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement