தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி தர்மபுரியில் 35 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி

*எஸ்பி ஆபீசில் பாதிக்கப்பட்டவர்கள் மனு

Advertisement

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மண்ணேரியை சேர்ந்த முத்துலட்சுமி உள்ளிட்டோர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மண்ணேரி பகுதியில் வசித்து வருகிறோம்.

கடந்த 2024ம் ஆண்டு, எங்கள் பகுதியை சேர்ந்த 2 பேர், எங்களை தொடர்பு கொண்டு, தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். வங்கியில் கடன் பெற்று, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாக ஆசைவார்த்தை கூறினர்.

மேலும், வங்கியில் வாங்கிய கடனை அவர்களின் நிறுவனம் சார்பாக செலுத்தி விடுவதாகவும், பெண்களுக்கு பல சலுகைகள் உள்ளது என்றும் கூறினர். இதை நம்பி நாங்கள் 35 பேர், வங்கியில் ரூ.60 லட்சம் கடன் வாங்கி, அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம். பல மாதங்கள் கடந்த நிலையில், கூறியபடி எங்களுக்கு பணம் வழங்கவில்லை.

வங்கியில் நாங்கள் பெற்ற கடனை செலுத்தவும் இல்லை. அவர்கள் எங்களை மோசடி செய்ததால், வங்கி நிர்வாகம், எங்களது தனிப்பட்ட வங்கி கணக்கை முடக்கியது. மேலும், கடன் தொகையை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், வங்கியில் உள்ள இதர பணத்தையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களிடம் மோசடி செய்தவர்களையும், அவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட்ட தர்மபுரியை சேர்ந்தவரையும் பிடித்து, எங்களது பணம் ரூ.60 லட்சத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்தர்மபுரி, அக்.24: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மண்ணேரியை சேர்ந்த முத்துலட்சுமி உள்ளிட்டோர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் மண்ணேரி பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த 2024ம் ஆண்டு, எங்கள் பகுதியை சேர்ந்த 2 பேர், எங்களை தொடர்பு கொண்டு, தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம்.

வங்கியில் கடன் பெற்று, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாக ஆசைவார்த்தை கூறினர். மேலும், வங்கியில் வாங்கிய கடனை அவர்களின் நிறுவனம் சார்பாக செலுத்தி விடுவதாகவும், பெண்களுக்கு பல சலுகைகள் உள்ளது என்றும் கூறினர். இதை நம்பி நாங்கள் 35 பேர், வங்கியில் ரூ.60 லட்சம் கடன் வாங்கி, அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம். பல மாதங்கள் கடந்த நிலையில், கூறியபடி எங்களுக்கு பணம் வழங்கவில்லை.

வங்கியில் நாங்கள் பெற்ற கடனை செலுத்தவும் இல்லை. அவர்கள் எங்களை மோசடி செய்ததால், வங்கி நிர்வாகம், எங்களது தனிப்பட்ட வங்கி கணக்கை முடக்கியது. மேலும், கடன் தொகையை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால், வங்கியில் உள்ள இதர பணத்தையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களிடம் மோசடி செய்தவர்களையும், அவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட்ட தர்மபுரியை சேர்ந்தவரையும் பிடித்து, எங்களது பணம் ரூ.60 லட்சத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில்

கூறியுள்ளனர்.

Advertisement

Related News