தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் மீண்டும் திரும்பி வந்த 30 யானைகள்

*விவசாயிகள் கவலை

Advertisement

ஓசூர் : தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு 30க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் திரும்பி வந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கர்நாடகா வனப்பகுதியிலிருந்து, கடந்த மாதம் தமிழக வனப்பகுதியான ஜவளகிரி வழியாக, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு 50 யானைகள் வலசை வந்தது. இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ராயக்கோட்டை வனச்சரத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வழியாக, ஓசூர் வனச்சரகம் சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன.

பின்னர், தனித்தனி குழுக்களாக பிரிந்து, வனத்தையொட்டியுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து, வனத்துறையினர் இந்த யானைகளை ஒன்றிணைத்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர செய்தனர். ஆனால், அந்த யானைகள் மீண்டும் ஊடேதுர்க்கம் மற்றும் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பி வந்தன.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, யானைகளை ஒன்றிணைத்து மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். பின்னர், அந்த யானைகளை தெர்மல் டிரோன் மூலம் கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு திரும்பி வந்தன.

இந்த யானைகள் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பி வராமல் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானைகளை விரட்டினாலும் திரும்ப, திரும்ப ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு திரும்பி வந்து பயிர்களை சேதப்படுத்துவதால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

Related News